Sonntag, 18. Januar 2015

மனிதம் குழு மீதும் தோழர் ரவி மீது உள்நோக்கம் கொண்டு சுமர்த்தப்பட்ட கொலைப் பழிக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பற்றிய எனது பதிவு.

மனிதம் குழு மீதும் தோழர் ரவி மீது உள்நோக்கம் கொண்டு சுமர்த்தப்பட்ட கொலைப் பழிக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பற்றிய எனது பதிவு.



தோழர் அசோக் சுமத்திய குற்றசாட்டிற்கு தோழர் ரவி எழுதிய பதில் கட்டுரையான வேதாளம் மீண்டும் முரங்கமரத்தில் என்ற பதிவினை எனது முகநூல் நண்பர்களிற்காக இங்கு மீள் பிரசுரம் செய்கின்றேன். இவ்விடயத்தில் எனது கடமைப்பாட்டையும் பொறுப்புணர்வையும் கவனத்தில் எடுத்து எனது சுய விளக்கத்தினையும்  இங்கு பதிவு செய்கின்றேன். 2005 இலும் இதற்கான விளக்கத்தினை தேனி இணைய சஞ்சிகையில் பதிவு செய்திருந்தேன் என்பதனையும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.

மனிதம் பற்றி

பல விடுதலை இயக்கங்களிலிருந்து கருது;து முரண்பாட்டால் வெளியேறிவர்களும் நீண்ட காலமாக அரசியலிலும் பல்வேறு சமூக தளங்களில் வேலைசெய்தவர்களும் புதிதாக அரசியல் களம் புகுந்தவர்களும் ஓன்று கூடியே வாசகர் வட்டம் என்ற படிப்பு வட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு நாம் ஓர் கூட்டுத்தலைமை முறமையையும் சுழற்சிமுறையிலான பொறுப்பெடுத்தலையும் முழமையாக உள்வாங்கி நடைமுறைப்புடுத்தி வெற்றியும் கண்டோம். வாசகர் வட்;டம் அரசியல் இலக்கியம்
சமூகம் பற்றிய கற்றலையும் விவாதங்களை மேற்கொண்டு தனது அரசியல் இலக்கிய பார்வையினை கூர்மைப்படுத்தியது. இதன் வெளிப்பாடாகவே மனிதம் வீடியோ சஞ்சிகையும் அதனைத்தொடர்ந்து மனிதம் சஞ்சிகையும் வெளியாகின. இச் சஞ்சிகையில் வெளியான ஆக்கங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள வாசகர்களிடம் ஓர் பெரிய எதிர்பார்பினை உருவாக்கியது. இச் சமகாலத்தில் தலைமறைவு கட்சியான தீப்பொறியிலும் கணிசமான மனிதம் தோழர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.

நான் 1994 களில் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக தீப்பொறியை விட்டு வெளியேறி இருந்தேன். இதே கால கட்டத்திலேயே தோழர் ரவியும் தீப்பொறியை விட்டு வெளியேறி இருந்தார். எமது பங்களிப்பு மீண்டும் வெகுஐன அமைப்பான வாசகர்வட்டத்தில் தொடர்ந்தது. எம்மிடம் அதி கூடிய தூய்மை வாதப்போக்கு எம்மை ஆழ்கொண்டிருந்தது. இதனால் பல உறவுகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தனித்துவைக்கப்பட்டோம்.

18 வது இலக்கிய சந்திப்பு

18 வது இலக்கிய சந்திப்பு 2-3 ஏப்பிரல் 1994 ம் ஆண்டு மனிதம் குழவினால் ஓழங்கு செய்யப்பட்டிருந்தது. இச் சந்திப்பில்; கனேடிய, ஸ்கண்டி நேவிய, ஐரொப்பிய நாடுகளில் இருந்து வெளியான சிறு சஞ்சிகை ஆசிரியர்களும் இலக்கிவாதிகளும் அரசியல் வாதிகளும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் காலம் சென்ற தோழர் புஸ்பராஐhவினால் சுவிற்சர்லாந்தின் புலிகளின் பொறுப்பாளரான முரளியும் அழைத்துவரப்பட்டார். இந்நிகழ்வு மனிதம் தோழர்களிற்கு ஓர் ஆச்சரயத்தினை அழித்திருந்தாலும் தோழர் புஸ்பராஐh தனது தனிப்பட்ட தொடர்பின் மூலமே அழைத்திருக்கின்றார் என்பதனை அறிந்து எம்மை நாம் சுதாகரித்துக் கொண்டோம்.; தோழர் சபாலிங்கம் தோழர் புஸ்பராஐh முரளி ஆகியோருக்கிடையிலான சுமகமான சம்பாசனைகள் நடந்ததை மட்டும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்நிகழ்விலே வீடியோ கசட் பரிமாறப்பட்டிருக்கும் ஓர் சம்பவம நடைபெறவில்லை என்பதனை அசோக்கிற்கு இங்கு ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகின்றேன். இவ்விடயங்களில் தோழர் ரவி மிக யாக்கிரதையானவரும் மிக கடின போக்கை கொண்டவர். அசொக் தனது குற்றசாட்டில் தோழர் ரவியே கசட்டினை பரிமாறியதாக குறிப்பிடுவது அப்பட்டமான ஓர் உள்நோக்கம் கொண்ட பழிவாங்களாகவே கருதுகின்றேன்.

தோழர் சபாலிங்கத்தின் படு கொலையும் இறுதிசடங்கும்

தோழர் சபாலிங்கம் படு; கொலை செய்யப்பட்ட வேளையில் பல தீப்பொறி உறுப்பினர்கள் கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்காக தாய்லாந்து சென்றிருந்தனர். இக் கொலையை கேள்விப்பட்டு அனைத்து மனிதம் குழுவே ஆடிப் போயிருந்தது. விடுதலை புலிகளினால்; கருத்து சுதந்திரத்திற்கு எதிராக புலத்தில்  ஏவப்பட்ட முதல் கொலையாக அமைந்திருந்தது. இக்கொலையை எவ்வாறு கண்டிப்பது என்பத பற்றி கூடி ஆலோசித்தே கண்டன-அஞசலி துண்டுபிரசுரத்தினை தமிழ் Nஐர்மன் மொழியில் தயாரித்து வெளியிட்டோம். புhதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு ஏனைய ஐரொப்பிய சஞ்சிகைகளுடன் கலந்து பேசி அவர்களின் அனுமதியுடன் அமைப்புக்களின் பெயர்களையும் துண்டுபிரசுரத்தில் இணைத்துக்கொண்டோம்.

பாரிசில் சபாலிங்கத்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நான் சென்றிருந்த போது எந்த தமிழர்களை காணும் போதும் சபாலிங்கத்தினை கொலை செய்தவன் இவனாக இருக்குமா என்ற சந்தேக நோயும் இனந்தெரியாத பயமும என்னை ஆட்கொண்டிருந்தது;. அப்படி இருந்தும் உறுதியுடன் மனிதம் குழு சார்பில் நான் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு இரங்கள் கூட்டத்தில் புலிகளின் இந்த அராஐக நடவடிக்கையையும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஆயத வேழ்வியினையும் வன்மையாக கண்டித்திருந்தேன்.

இறுதி சடங்கு முடிவடைந்த உடனேயே என்னையும் ஏனைய ஐரொப்பிய நண்பர்களையும் பிரான்சு நாட்டு பொலிசார் விசாரணைக்கு அழைப்பதாக தோழர் புஸ்பராஐh கூறியிருந்தார். அவரே எம்மை பொலிஸ் நிலையத்திற்கும் அழைத்து சென்றார். போலிசார் ஓவ்வொருவராக விசாரணைக்கு அழைத்தனர். என்னை அழைத்த பொலிசாரின் அலுவலக சுவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. சுவர்கள் அனைத்தும் எமது விடுதலை இயக்கங்களால் வெளியிடப்பட்டிருந்த துண்டுபிரசுரங்களாலும் போஸ்டர்களாலும் இயக்க தலைவர்களது புகைப்படங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது எனக்கு இன்னுமொரு செய்தியை சொன்னது. புpரஞ்சு பொலிசார் புலத்தில் நடைபெற்ற அனைத்து இயக்க செயற்பாடுகளையும் எம்மவருக்கு தெரயாமலே  நன்கு அவதானித்து வந்திருக்கின்றது என்பது புலனாணது.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் நடந்த விடயங்களை பற்றி என்னிடம் துருவிதுருவி கேட்டு அறிந்து கொண்டனர். அது மட்டுமல்லாது தோழர் சபாலிங்கத்திற்கும் எனக்குமிருந்த தொடர்பு அவர் பற்றி நான் அறிந்த அரசியல் வாரலாறுகளையும் நீண்ட மணித்தியாலங்களாக நடைபெற்ற விசாரணையில் இருந்து அறிந்து கொண்டனர். இந்த சிறப்பு பொலிசாரின் சந்தேகங்கள் சுவிற்சர்லாந்து மனிதம் பக்கம் திரும்பி இருப்பின் கொலை பற்றிய விசாரணைகள் சுவிற்சர்லாந்திலும் தொடர்ந்திருக்கும். அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சந்தேகஙகள் பற்றிய விளக்கம்

எவரோ இக் கொலையிலிருந்து தப்பிப்தற்காக 18 வது இலக்கிய சந்திப்பினையும் மனிதம் குழவையும் துணைக்கு இழுக்கின்றனர்.  தோழர் சபாலிங்கமும் புலிகளின் பொறுப்பாளர் முரளியும் கலந்து கொண்டதனை மட்டும் வைத்து கொண்டு கொலைக்கும்  மனிதத்தின் இலக்கிய சந்திப்பு வீடியோ கசட்டினையும் தொடர்பு படுத்துவதும் கொலைப் பழியை மனிதம் குழு தோழர்கள் மீது போடுவது ஓர் படும் அபத்தமான செயற்பாடாகும். இக் கொலைக்கு உடந்தையானவர்களின் பெயர்கள் அம்பலத்திற்கு வந்துவிடும் என்று பயப்பிடுவதினாலா கொலைப் பழி மனிதம் குழு மீது வந்து விழுகின்றது எனும் சந்தேகம் மேலும் வலுப்படுகின்றது.

இங்கு வேறுசில சம்பவங்களும் மனிதம் குழு புலிகளுடன் வேலை செய்தது என்ற தவறான செய்தியிலிருந்தே இவ் வகையான ஆதாரமற்ற பழிகள் தொடர்கின்றனவா எனும் கேள்வியும் என்னிடம் எழுகின்றது. இதனால் தீப்பொறியும் அதன் அரசியல் நகர்வு பற்றியும் புலிகளின் கலை இலக்கிய மேடையை அலங்கரித்த பழைய மனிதம் தோழர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டிய தேவை எழுகின்றது.

புலிகளின் ஐனநாயக மறுப்பு, அரசியல் வறுமை, இனவாத தேசியம், போன்ற கருத்துக்களுடன் தீப்பொறி பலகாலமாக மாறுபட்ட கருத்தினை கொண்டிருந்தது. ஆனால் இறுதிக்காலங்களில் புலிகளின் ஊடுருவாலால் கட்சியில் தேசியம் சம்பந்தமான நிலைப்பாடு மாற்றப்பட்டு அப்பட்டமாக புலிகளின்  போராட்ட வடிவமே சரியானது என நிறுவும் துர்பாக்கிய நிலைக்கு வந்தடைந்தனர். ஏன் நாம் தீப்பொறி கட்சி அரசியலில் மேலும் தொடர்ந்து இருக்கவேண்டும் கேள்வியை பல தீப்பொறி; தோழர்கள் எழுப்பியிருந்தனர். இதன் விளைவு புலிகளுடன் இணைவதே சரியென கருதி இறுதிக்காலங்களில் புலிகளுக்கு நிதியை வழங்கி புலிகளின் போராட்டத்தினை ஊக்குவித்தனர். ஆனால் இவ்வாறு ஈடுபட்ட பல தோழர்கள இன்று; தமது பிழையான  அரசியல் நகர்வினை உணர்ந்து கொண்டுள்ளனர்.

அதே போல் கலை இலக்கியங்களில் ஈடுபட்ட ஓருசில தோழர்கள் மனிதத்தின் உடைவிற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் கலை இயக்க பணிகளுடன் தம்மை இணைத்து தமது ஆக்கங்களை விடுதலைப்புலிகள் மேடைகளில் மேடை ஏற்றிவந்தனர்.

அரசியலில் கருத்து பார்வை மாற்றங்கள் சூழ்நிலைகளிற்கு ஏற்ப மாறுபடுவது ஓன்றும் புதிதல்ல. ஆனாலும் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் தம்மால் முன்வைக்கப்பட்ட அடிப்படை முற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிரானதாக அமையுமாயின் அதிலிருந்து வெளியாகுவதே சிறந்த செயற்பாடாகும். இந் நகர்வுகள் என்றும் சரி என நியாயப்படுத்துவது ஓர் பிழையான அரசியல் நடவடிக்கையாகும.;

அரசியல் பார்வையில் வேறுபாடான கருத்துக்களையும்
முரண்பாடுகளையும் கொண்டிருந்தாலும் அடிப்படையில் எக் காலகட்டத்திலும் நானும் தோழர் ரவியும் புலிகளின் அரசியலை விமர்சித்தும் நிதியினை வழங்காது நேரடியாக முரண்பட்டவர்கள் என்பதனை தோழர் அசோக்கிற்கு ஞாபகபடுத்த விரும்புகின்றேன்.

ஆவணப்படுத்தல்

எமது செயற்பாடுகளில் நடைபெற்ற பல விடயங்களை நாம் ஆவணப்படுத்தவில்லை என்பதே எமது மிகப்பெரிய தவறாக உணர்கின்றோம். எமது கடந்தகால அரசியலை வைத்து பிரமுகமாகும் நோக்கமும் எதிர் கால திட்டமும் எம்மை ஆட்கொண்டதில்லை. ஆவணப்படுத்தாமல் போனதிற்கான இதுவும் ஓர் காரணமாக அமைந்துள்ளது. இது ஓர் வரலாற்று தேவை என்பதனை நாம் தற்பொழுது பல தடைவைகள் உணர்ந்துள்ளோம்.

வேண்டுகோள்

இறுதியாக ஒன்றை மட்டும் வலியுறுத்த ஆசைப்புடுகின்றேன். நாம் பலர் பல்வேறு பட்ட தளங்களில் இருந்து செயற்பட்டாலும் இணையக் கூடிய பல புள்ளிகல் எம்முன்னே நிறையவே உள்ளது. ஆகவே அடிப்படை நம்பிக்கைகள் தளராது பார்து;துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் இலக்கியதளங்களில் ஈடுபடும் தோழர்கள் மீதுள்ள முன் நிபந்தனையாக அமைகின்றது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen